search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்பு விழா"

    • வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார்.
    • பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவ தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இதில் வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு முழுவதும் பதவியில் இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்து பிரிவு களிலும் தத்தம் குழு மாண வர்களை வழி நடத்துவர்.

    வருட இறுதியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தோஷ், அருண் மற்றும் பவித்ரா செய்திருந்தனர்.

    • காலம் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
    • முன்னாள் ஐ.ஜி., பாரி பேச்சு

    திருப்பூர், ஜூன்.26-

    திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 2023-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நிதியுதவி வழங்கும் விழா திருப்பூர்- மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக எஸ். இளங்கோவன், செயலாளராக ஆர். மோகன்ராஜ், பொருளாளராக ஆர். பினுமோன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். கவுரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் நாராயண சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, உதவி ஆளுனர் மீனாட்சி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., பாரி பங்கேற்று பேசியதாவது:- புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பது அவர்கள் பேசிய பேச்சிலிருந்து உணர முடிகிறது. நாம் தாய் மொழியின் பெருமையை உணர வேண்டும். மனிதராக பிறந்த நாம் பிறருக்கு கொடுப்பதால் உயர்ந்து நிற்கிறோம். தமிழ் வாழ வேண்டும் என்று ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் தனது உயர்ந்த உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட எளியவர்களுக்கு கொடுப்பது தான் உயர்வு என்கிறார் வள்ளுவர். இந்த நவீன உலகில் நமது வரலாற்றையும்-பண்பாட்டையும் நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

    இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் நான்கு பேருக்கு உதவி செய்யும் நிலைக்கு வர முடியும். காலமும் நேரமும் முக்கியமானது. அதனை உணர்ந்து நாம் வாழ வேண்டும். நமது பெற்றோர்களை அனாதை இல்லத்துக்கு அனுப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சி முடிவில் தனியார் பள்ளி ஆசிரியரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம், தெற்கு ரோட்டரி பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 20 ஆயிரம், ரோட்டரி சார்பில் கட்டப்பட உள்ள முதியோர் இல்லத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டன. முதியோர் இல்லம் கட்ட 3 ஏக்கர் நிலம் வழங்கிய கனகராஜ் என்பவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட முன்னாள் தலைவர் மணி, முன்னாள் செயலாளர் விவேகானந்தன், முன்னாள் பொருளாளர் செல்வன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட திட்டக்குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் சத்தியாபாமா, துணை தலைவராக கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர் 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய தலைவர்கள், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.

    • மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.
    • மம்தாவிற்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

    கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

    இதையடுத்து, பெங்களூருவில் இன்று 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.

    இந்நிலையில், இந்த விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ககோலி கோஷ் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டடு இன்று பதவி ஏற்றார்.
    • திரிபுராவில் பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.

    வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும் பதவியேற்பு விழா நடக்கிறது.

    அதன்படி, மேகாலயா முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சர்மா தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது. கவர்னர் சத்யதேவ் நாராயன் பதவி பிரமாணம் செய்து வைக்க, மீண்டும் முதல்வராக கான்ராட் சர்மா பதவியேற்றுக் கொண்டார்.

    2 துணை முதல்வராக மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் புதிய அமைச்சரவையில் பதவியேற்பு விழா நடந்தது.

    பா.ஜ.க. கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக வளர்ச்சி கட்சி (என்.டி.பி.பி.) தலைவர் நெய்பியு ரியோ முதல்வராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    திரிபுரா மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.

    முன்னதாக நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை நடைபெறும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்
    • தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர்

    திருச்சி:

    ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்க 26-வது மகாசபையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் தலைமை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சி.செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விழாவிற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டி.ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

    நிர்வாகிகள் பெரியசாமி, சுப்பையாபிள்ளை, தேவராஜன், ராஜசேகரன், லோகநாதன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மங்கள் அண்டு மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ், உபதலைவராக டி.சாத்தனூர் பி.புரவி, செயலாளராக ஆலம்பட்டி என்ஜினீயர் சதீஸ்வரன், பொருளாளராக புத்தனாம்பட்டி செந்தில்குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

    அவர்களிடம் பொறுப்புகளை மூக்கப்பிள்ளை ஒப்படைத்து தலைவருக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தார்.

    தமிழ்நாட்டின் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்ட இந்திரா கணேசன் கல்வி குழும செயலாளர் ராஜசேகரை கெளரவித்தனர். புதிதாக தலைவராக பதவியேற்றக் கொண்ட சிவானி கல்லூரி சேர்மன் டாக்டர் பி.செல்வராஜ் ஏற்புரை நிகழ்த்தினார்.

    விழாவில் இலங்கை புஷ்பநாதன், மூர்த்தி, நாமக்கல் செல்வராஜ், பெங்களூர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சண்முகசுந்தரம், முசிறி ரமேஷ்பாபு, வி.சிதம்பரம், செந்தில் (எ) சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வாழ்த்துரை வழங்கினார்கள்.

    முடிவில் துணைத்தலைவர் புரவி நன்றி கூறினார்.

    • நேர்மையாக வாக்களிப்பது முறையினை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
    • குழுக்களின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவியேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாணவர்கள் அனைவரும் கணினி வாயிலாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம் தங்களுடைய வாக்கின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் எவ்வாறு நேர்மையாக வாக்களிப்பது என்ற முறையினையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

    தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவ பேரவையின் மாணவ தலைவராக 12-ம்வகுப்பு மாணவர் பிரதோஷ் மற்றும் மாணவ தலைவியாக 12-ம்வகுப்பு மாணவி அருந்ததி ஆகியோர் பதவியேற்றனர்.

    நிகழ்ச்சியில் ஹெர்குலிஸ், ஒரையன், லைரா, பெகாசிஸ் ஆகிய குழுக்களின் தலைவர் மற்றும்துணை தலைவர்கள் பதவியேற்றனர். மேலும் பிரஸ் கிளப், கல்ச்சுரல் கிளப், மேட் சயின்ஸ் கிளப், மேஜிக்கல் மேக்ஸ், டெக்னோ கிளப், நேச்சர் கிளப் ஆகிய கிளப்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர்களும் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் மொத்தமாக 27 மாணவ, மாணவிகள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் பள்ளி முதல்வர் லாவண்யா, துணை முதல்வர்,தலைமையாசிரியை, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். பள்ளியின் இயக்குனர் - செயலாளர் பேசுகையில் , தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழுமாறு அறிவுரை வழங்கினார்.  

    • அவரவர் திறமை உணர்ந்து வேலைகளை பகிர்ந்து அளித்தல், எந்த சூழ்நிலையிலும் தானும் களத்தில் இறங்கி வேலை செய்தல் போன்ற தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • எதிர்கால சந்ததியினர் பள்ளி பருவத்திலேயே பிறரை தனக்கு சமமாக பாவித்தல், பாராட்டுதல், கண்டிப்பு, சரியான பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லுதல் வேண்டும்

    திருச்சி;

    திருச்சி மாவட்டம் சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீபள்ளியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லெப்டினல் கர்னல் அஜய்குமார் மற்றும் திருச்சி ஜி ஹெச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி செயலாளர் செந்தூர் செல்வன் தலைமை வகித்து பேசுகையில் , எதிர்கால சந்ததியினர் பள்ளி பருவத்திலேயே பிறரை தனக்கு சமமாக பாவித்தல், பாராட்டுதல், கண்டிப்பு, சரியான பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லுதல், அவரவர் திறமை உணர்ந்து வேலைகளை பகிர்ந்து அளித்தல், எந்த சூழ்நிலையிலும் தானும் களத்தில் இறங்கி வேலை செய்தல் போன்ற தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    மாணவர்களுக்கான தலைவர் ஜாகிர் அகமதும், மாணவிகளுக்கான தலைவர் ஆன்டோட்ரியாவும், மாணவர் விளையாட்டுத் தலைவர் முகமது ரிலாவும், மாணவி விளையாட்டு தலைவி அஷ்விதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி ஆலோசகர் சிவகாமி ஜெயக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கல்வி ஆலோசகர் உறுதிமொழி கூற மாணவர்களுக்கு உற்சாகத்துடன் உறுதிமொழி ஏற்றனர்.

    மேலும் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள கிரிம்சன் , ப்ளூபெல்ஸ், ஜினியா, ட்ேபாடில் நிர்வாகிகள் தங்கள் இல்ல கொடிகளை ஏந்தி கம்பீரமாக அணிவகுத்து வந்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

    காவல் ஆய்வாளர் தனது சிறப்புரையில், திருச்சி நகரில் வைரம் போல் மிளிர்கின்ற ஒரு பள்ளி சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா பள்ளி என்றும், அங்கு பயிலும் மாணவர்களும் வைரம் போல் மிளிர்வதை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    லெப்டினன்ட் கர்னல் சிறப்புரையில் ஆளுமை திறமை பள்ளி வயதினிலே பெறுவது பெருமைக்குரியது என்றார்.

    • அரியலூரில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராயல் சென்டினியல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னாள் தலைவர் சந்திரசேகர் தலைமையில், சாசன தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடை பெற்றது. அனைவரையும் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

    2022 -23 புதிய நிர்வாகிகள், தலைவராக காமராஜ், செயலாளராக மாலா தமிழரசன், பொருளாளராக ஆனந்தன், நிர்வாக அலுவலராக சக்திவேல், இயக்குனர்களாக டில்லிராஜ், ராஜேந்திரன், கொளஞ்சிநாதன், முருகேசன், ராஜா, குமரன், நாகராஜன், சரவணன், பிரபாகரன், ஜெயராமன், மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக ராஜசேகரன், முரளிதரன், முத்துக்குமார், செந்தில்குமார், செல்வராஜ், மானக்ஷா, பாலசுப்பிரமணியன், மோகன்ராஜ் ஆகியோர்கள் பணியேற்று கொண்டனர்.

    நிகழ்ச்சியில் துணை ஆளுநர் சவுரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி சண்முகவேல், சரவணன், மண்டல தலைவர் டென்சி, வட்டாரத் தலைவர் சங்கர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    சோழவந்தானில் லயன் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவிஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவராக தொழிலதிபரும், கல்வியாளருமான எம். மருதுபாண்டியன் பதவியேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் பாண்டியராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து சண்முகசுந்தரம் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். 

    மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட ஆளுநர் செல்லப்பாண்டி, மாவட்ட 2-ம் துணை ஆளுநர் சசிகுமார், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட அமைச்சரவை முதன்மை நிர்வாகிகள் ஜெகநாதன், பிச்சை மாரிமுத்து, செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

    பின்னர்  முதல் துணைத்தலைவர் கண்ணன், 2-ம் துணைத்தலைவர் பாஸ்கரன், செயலாளர் பிச்சைமணி, பொருளாளர் கந்தன், முன்னாள் தலைவர் ஆறுமுகம், உறுப்பினர்  சரவணன், எல். சி. ஐ.எப். ஒருங்கிணைப்பாளர் முத்துலிங்கம், சேவை திட்ட பொறுப்பாளர் பரிசுத்த ராஜன், மக்கள் தொடர்பாளர் தங்கராஜ், சங்க ஆலோசகர் மற்றும் பொறுப்பாளர் செல்லப்பாண்டி, சங்க ஒருங்கிணைப்பாளர் ஜவகர் ஆகியோர் 2022-23-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 
    ×